நெற் பயிரில் குருத்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வாசுதேவநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் விளக்கியுள்ளார்.
- இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்தவும், குருத்து புழுவின் தாக்குதல் ஏற்படா வண்ணம் தடுக்கவும் ஒரு ஏக்கருக்கு புரபனோபாஸ் 400 மிலி அல்லது இன்டாக்சகார்ப் 80 மிலி மருந்தினை ஒட்டும் திரவமான சாண்டோவிட் அல்லது பைட்டோவிட் 200 மிலியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
- பூச்சி கொல்லி மருந்துடன் நோய் கொல்லி மருந்தினை கலந்து அடிக்க கூடாது.
- செயற்கை பைரித்திராய்டு மருந்து தெளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்