சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு கொடுக்க படும் ஒரு முக்கிய காரணம் இதோ:
“நம்முடைய மிகவும் திறன் அற்றது. விவசாயி இடம் இருந்து காய்கறி அல்லது தானியம் முதலில் ஒரு வணிகரிடம் போகும். அவரிடம் இருந்து மொத்த வணிகரிடம் போகும். பிறகு, ஒவொரு இடத்தில இருக்கும் சிறு
கடை காரர்கள் இந்த மொத்த வணிகரிடம் இருந்து வாங்கி வந்து நுகர்வோரிடம் விற்பார்கள்.
இந்த சங்கிலியில், உற்பத்தி பொருளில் 40% சதவீதம் வரை வீணாகிறது.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டால் நமக்கு புதிய தொழிற்நுட்பம் கிடைக்கும். இதன் மூலம் வீணாவது குறைக்கலாம்”
இவ்வாறு கூறினார் மதிய அமைச்சர் ஆனந் ஷர்மா.
ராகுல் காந்தியோ இந்த வீணாகும் சத வீதம் 70% என்று கூறினார்!
இந்த சதவீதங்கள் எப்படி மாயமாக வந்ததோ தெரியவில்லை
இப்போது, பஞ்சாபில் உள்ள லூதியானாவில் இருக்கும் மதிய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் The Central Institute of Post-Harvest Engineering & Technology (CIPHET) இந்தியாவில் 106 இடங்களில், 46 விதமான உற்பத்தி பொருட்களில் உள்ள வீணாகும் அளவுகளை பற்றிய
ஆராய்ச்சியை மேற்கொண்டது
இந்த ஆராய்ச்சியில் வந்துள்ள முடிவுகள்:
- காளி ப்ளோவேர் வீணாவது 8.4%
- தக்காளி 12%
- சப்போட்டா 5.8%
- பருப்பு வகைகள் – 4-6%
- எண்ணை வித்துகள் – 6%
எந்த ஒரு பொருளும் வீணாவது 40% சதவீதமோ 70% இல்லை! இந்த அறிக்கை மதிய அரசின் இருந்தே வந்துள்ளது !
ஆக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை கொண்டு வர கூற பட்ட ஒரு காரணம் பொய்.
மேலும் பார்ப்போம..
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்