மஞ்சள் சாகுபடிக்கு உரம் வாங்க ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்து, ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எண்ணத்தில், ஈரோடு மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அதிகளவு மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். கடந்தாண்டில் இருந்தே மஞ்சள் விலை திடீரென கடும் விலைச்சரிவு ஏற்பட்டது.
விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மஞ்சள் பயிருடன் ஊடுபயிரமாக பல்வேறு தானியங்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
வெள்ளோடு, கனகபுரம், டி. மேட்டுப்பாளையம் பகுதியில் மஞ்சளுடன் ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்துள்ளனர்.
டி.மேட்டுப்பாளையம் விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:
- மஞ்சள் பத்து மாத பயிர். மஞ்சள் விலை நிலையில்லாமல் சரிவை சந்தித்துள்ளது.
- இதன் காரணமாக மஞ்சளுடன் ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்துள்ளேன்.
- செங்கீரை மூன்று மாத பயிர். வேப்பம் புண்ணாக்கு, காம்ப்ளக்ஸ் உரம், உப்பு ஆகியவை இடுகிறோம்.
- 30 நாளில் அறுவடையாகும் கீரையை ஈரோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வோம். கட்டு 1.50 ரூபாய் வரை விலைபோகிறது.
- மஞ்சளுடன் கீரை சாகுபடி செய்வது கைச்செலவுக்கு பெரிதும் உதவுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்