நத்தம் பகுதியில் தென்னை மரங்களுக்கு இடையே வெண்டைக்காயை ஊடுபயிராக செய்து விவசாயிகள் பயனடைகின்றனர். நத்தம் சுற்று வட்டார பகுதிகளான எரமநாயக்கன்பட்டி, முளையூர், புண்ணப்பட்டி பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உயரமாக வளர்ந்த தென்னைகளுக்கு இடையே ஊடுபயிர் செய்யும் முறை விவசாயிகளிடையே உள்ளது.
கருணைக் கிழங்கு, கோக்கோ, வாழை உள்ளிட்டவை தென்னைகளுக்கு இடையில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
அதன் வரிசையில் வெண்டை பயிரையும் தற்போது சாகுபடி செய்கின்றனர். அடர்த்தி குறைவாக உள்ள தென்னந்தோப்புகள் இம்முறை சாகுபடிக்கு ஏற்றதாகும்.
இதில் செடிகளுக்கு தேவையான சூரிய ஒளி கிடைக்கும். பயிர் செய்ததிலிருந்து 75 நாட்களில் காய்க்க துவங்கிவிடும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காய்கள் பறிக்கலாம். நன்றாக பராமரித்து வந்தால் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பலன் தரும்.
விவசாயி முருகன் கூறியதாவது, “தென்னைக்கு பாய்ச்சும் தண்ணீரை விட சற்று கூடுதலாக நீர் பாய்ச்சினால் போதுமானது. மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து வருமானம் கிடைக்கும். தேங்காய் மற்றும் வெண்டையில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கிறது. தொடர்ந்து ஊடுபயிர் சாகுபடி செய்ய முடிவு செய்துள்ளேன், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்