நெல் அறுவடையின்போது விதை சேமிப்பு அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் சு.அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
- திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் ரகத்தினை பிற ரகத்துடன் கலக்காத வகையில் அறுவடை செய்து தனித்தனியாக சேமித்துவைக்க வேண்டும்.
- பயிர் அறுவடை செய்யும் இயந்திரத்தை நன்கு சுத்தம் செய்து பின்பு பயன்படுத்த வேண்டும்.
- முதலில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை விதைக்கு பயன்படுத்தக் கூடாது.
- அறுவடை செய்த விதைக் குவியல்களை நன்கு சுத்தம் செய்து களங்களில் உலர வைக்க வேண்டும்.
- விதைகளின் ஈரப்பதத்தை படிப்படியாகக் குறைத்து 12 முதல் 13 சதம் வரும் வரை உலர வைக்க வேண்டும்.
- பின்னர், நன்கு உலர்ந்த விதைகளை புதிய கோணிப் பைகளில் சேமிக்க வேண்டும். மேலும், அடையாளத்துக்காக விதைகளின் ரகத்தை அதில் எழுதி வைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Nice message