கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்பட்டு ள்ள நெல் பயிரில் அந்துப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.
- அந்து பூச்சிகள் மஞ்சள் நிறமாக இருக்கும். இலையின் நுனிப்பகுதியில்,மேற்பரப்பில் இளம் மஞ்சள் நிறமுடைய முட்டைகளை குவியல் குவியலாக இட்டு பழுப்பு நிற ரோமங்களால் மூடும்.
- புழுக்கள் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மெல்லிய நூலிழையில் ஊசலாடுவதை காணலாம்.
- தாக்கப்பட்ட தண்டுகளில் சிறு துவாரத்தையும், தண்டினுள்ளே புழுவையும் அதன் கழிவையும் காணமுடியும்.
- நடவு வயலில் இதன் தாக்குலால் நடுக்குருத்து காய்ந்திருக்கும்.
தடுக்கும் முறைகள்
- வயல்களில் நடுவே விளக்குப்பொறியினை வைத்து, இப்பூச்சியின் வரவை முன்கூட்டி அறியலாம்.
- இளம்பருவத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 10 சதவீதம் குருத்துக்களுக்கு கீழ் காய்ந்திருந்தால், பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையில்லை.
- கதிர் வெளிவரும் பருவத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 2 சதவீத வெண்கதிர் இருந்தால் முட்டைக்குவியலை அழிக்கலாம்.
- சரியான இடைவெளியில் நாற்றுகளை நடவேண்டும்.
- அறுவடைக்குப் பின் நிலத்தை உழவு செய்ய வேண்டும்.
- விளக்கு பொறிகளை வைத்து, தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
- முட்டை, புழு ஒட்டுண்ணிகள் மூலமும் கட்டுப்படுத்தலாம்.
- ஒரு ஏக்கருக்கு மோனோகுரோட்டாபாஸ் 200 மில்லி அல்லது குயினால்பாஸ் 400 மில்லி தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அந்துப்பூச்சியை கட்டுப்படுத்த விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவசாயத்துறை உதவி இயக்குநர் (பொ) ராமராஜ் கூறியுள்ளார்.
நன்றி:தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்