கனரா வங்கியின் தொழில் பயிற்சி நிலையம் சார்பில், இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பு 2015 ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஈரோடு, அசோகபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில், மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலின் படி, கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் மூலமாக இப்பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சி பெற தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.
பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பயிற்சி நிலைய அலுவலகத்தை 04242290338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் பூபாலன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்