கொடிவகை காய்கறிகள் (பாகல், புடலை, சுரை, பீர்க்கன், தர்பூசணி, பரங்கி) சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2016 நவம்பர் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது என அதன் தலைவர் என்.அகிலா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பயிற்சியில் கொடிவகை காய்கறிகளிலுள்ள புதிய ரகங்கள், பருவம், விதை அளவு, விதை நேர்த்தி. பயிர் இடைவெளி, உர மேலாண்மை, நுண்ணூட்ட மேலாண்மை, சொட்டு நீர் பாசன முறையில் நீர் வழி உரமிடல், வடிவமைப்பு முறைகள், களை நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் நிர்வாக முறைகள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் விரிவாகக் கற்றுத்தரப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்
விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286266345 , 04286266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 9 ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
நன்றி : தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்