புதுக்கோட்டை மாவட்டத்தில், ஐ.ஓ.பி., வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், இளைஞர்களுக்கு கறவை மாடுகள்வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில், 18 வயதுக்கு மேல், 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.
பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் கல்விசான்றிதழ், ரேஷன்கார்டு, ஃபோட்டோவுட ன் வரும், 8ம் தேதிக்குள் புதுக்கோட்டை டவுன் மேல 4ம் வீதியில் உள்ள ஐ.ஓ.பி., கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்பெற விரும்புவோர், 09994737185, 04322225339 ஆகிய போன் எண்களில்தொடர்புகொள்ளலாம்.
நன்றி:தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்