கோவை வேளாண் பல்கலை உருவாக்கிய, ‘கோ.ஆர். – 51’ எனும், புதிய நெல் ரகத்திற்கு, மத்திய அரசு, அங்கீகாரம் வழங்கி உள்ளது. இந்த வகை நெல்லை, அனைத்து பருவத்திலும் பயிரிடலாம் என்பதால், விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு, கோ.ஆர். – 51 என்ற புதிய நெல் ரக விதையை, பல்கலை உருவாக்கியது. இந்த விதை, முதலில், மாநில ஆராய்ச்சி கழகத்தின் சார்பில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது; பின், மத்திய ஆராய்ச்சி கழக ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
ஜனவரியில், ‘இந்த விதை ரகம் தரமானது’ என, மத்திய அரசு அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட, அனைத்து மாநிலங்களிலும், புதிய ரக நெல் விதை விற்பனை துவங்கி உள்ளது.
பல்கலையின் விதை மைய தனி அலுவலர் பாஸ்கரன் கூறுகையில், ”புதிய ரக நெல், அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது என்பதால் விவசாயிகள் மத்தியில், அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. விதையை பயிரிடுவதற்கான செய்முறை குறிப்புகளும், விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன,” என்றார்.
- புதிய நெல் ரகம், 105 நாட்களில் வளர்ந்து விடும்.
- பூச்சி, நோய்களின் தாக்கத்தை எதிர்த்து வளர்ந்து, அதிக விளைச்சலை தரக் கூடியது;
- நேரடி நெல் விதைப்பில் பயிரிடக் கூடியது.
இதனால், இந்த ரக விதை நெல்லை வாங்குவதில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
திருவண்ணாமலைமாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கோ.ஆர் 51 ரகம் விதை நெல் எங்குகிடைக்கும்
தகவலுக்கு மிக்க நன்றி
kallakurichi pakkathula kidakuma? nan sankarapuram endra vattathai serthavan.
தெரிந்தவுடன் தெரிவிக்கிறேன். நன்றி – அட்மின்
Where can I get the seed in harur(dharmapuri district)
கோ51 நெல் சாயும் தன்மை கொன்டதா?
சிவகங்கை மாவட்டத்தில் கோ.ஆர் 51எங்கு கிடைக்கும். தெரிந்தவர்கள் பதிவிடவும்.
கோ.ஆர்.51,என்ற ரகம் விதைநெல் எங்கு கிடைக்கும்.
தயவுசெய்து பதிவிடுங்கள்.