இயற்கை பூச்சி விரட்டிகள்

பசுமை தமிழகத்தில் இயற்கை பூச்சி விரட்டிகள் பற்றி படித்து இருக்கிறோம். இதோ, மேலும் இரண்டு இயற்கை பூச்சி விரட்டிகள்

நொச்சி இலை, வேம்பு தழை கரைசல்

நொச்சித்தழை 5 கிலோ மற்றும் வேப்பந்தழை 5 கிலோ ஆகியவற்றை ஒரு பானை நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.  அதனை கூழாக்கி ஒரு இரவு வைத்திருந்து பின்பு வடிகட்டி அதனை 100 லிட்டர் நீரில் கலந்து  ஒரு ஏக்கருக்கு தெளித்தால் நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு,  குருத்துப்புழு, கதிர்நாவாய்பூச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம்.

எருக்கம் தழை கரைசல்

எருக்கம் தழையினை 20 கிலோ என்ற அளவில் எடுத்து அரைத்து அதன் சாற்றினை 100லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் நெல் வயலில் தெளித்தால் குலைநோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம்.

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *