புரோட்டினியா புழு:
- பயிரிடப்பட்டுள்ள உளுந்து மற்றும் பச்சைப்பயறுகளில் புரோட்டினியா புழு தாக்குதல் காணப்படுகிறது.
- நெல் தரிசு உளுந்து பயிரில் சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளில் புரோட்டினியா புகையிலைப்புழு முக்கியமானதாகும்.
- இப்புழு முழு இலைகளையும், பூ மொட்டுகளையும், காய்களையும் தின்று சேதப்படுத்தும்.
- இப்பூச்சியின் தாக்குதல் இரவு நேரங்களில் அதிகம் காணப்படும்.
- புழுக்கள் பகல் நேரத்தில் மண் வெடிப்புகளிலும், சருகுகளின் அடியிலும் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிரின் அடித்தூர்களிலும் பதுங்கி இருக்கும்.
- அந்துப்பூச்சியின் முன் இறக்கை பழுப்பு நிறமாகவும், வெள்ளை நிறக்கோடுகளுடன், பின் இறக்கை பழுப்பு நிறமாகவும், பழுப்பு நிறத்திட்டுகளுடன் காணப்படும்.
- ஒரு பெண் அந்துப்பூச்சி 200 முதல் 300 முட்டைகள் வரை இலைகளின் மேற்பரப்பில் குவியலாக இட்டு தன் உடம்பில் உள்ள செதில்களால் மூடி வைத்திருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- முட்டையில் இருந்து வெளிவரும் புழுவானது இலைகளின் மேற்பரப்பில் உள்ள பச்சையத்தை சுரண்டி தின்று சேதப்படுத்துகிறது.
- புழு வளர்ச்சி அடைந்த பின்னர் தனித்தனியாகப் பிரிந்து சென்று இலைகளையும், பூ மொட்டுகளையும் தின்று அதிகமான அளவில் சேதப்படுத்தும்.
- இப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.
- இப்பூச்சியின் முட்டை குவியலையும், முட்டையிலிருந்து பொரித்து கூட்டமாக மேயும் வளர்நிலை புழுக்களையும் சேகரித்து அழித்திடவேண்டும்.
- இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாகும்போது குளோர்பைரிபாஸ் 500 மில்லி அல்லது டைகுளோர்வாஸ்-76 என்ற 400 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் தெளித்து பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
தகவல்: தி.செங்குட்டுவன், தலைவர், செந்தில்குமார் உதவிப்பேராசிரியர் [பூச்சியியல்துறை] நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம்.
தகவல் அனுப்பியவர் : முருகன், ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், திருவையாறு
நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்