எள்ளில் தண்டு பிணைப்பான

எள்ளில் உண்டாகும் பூச்சி நோய்களை பயிர் பாதுகாப்பு செய்து கட்டுப்படுத்தலாம் என மொடக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.இதுகுறித்து மொடக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் குழந்தைவேலு கூறியதாவது:

  • எள்ளுச் செடிகளில் தண்டு பிணைப்பான், காய் பிணைப்பான் குறிப்பிடத்தக்க பூச்சிகளாகும். அதிக தாக்குதல் இருந்தால் செடி காய்ந்து விடவும் வாய்ப்புண்டு.
  • இதைக் கட்டுப்படுத்த, பூச்சி தாக்கிய குருத்துக்களை, காய் கொத்துக்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • ஒரு ஹெக்டேருக்கு மாலத்தியான் அல்லது பென்தியானை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். காவடிப்புழுக்கள் இலைகளை தின்று விட்டு நரம்புகளை மட்டுமே விட்டு வைத்திருக்கும்.
  • இதைக் கட்டுப்படுத்த புழுக்களை மொத்தமாக சேர்த்து அழிக்கவேண்டும். இவைகளுக்கும் பென்தியான் மருந்து தெளிக்கலாம்.
  • எள் செடியில் நத்தை பூச்சி நோய் மிகவும் மோசமானது. நத்தை பூச்சி, இலை நரம்புகளை மட்டும் விட்டு விட்டு பிற பாகங்களை கடித்து சேதப்படுத்தும். புழு நத்தையை போன்ற தட்டையான உடல் கொண்டது. இப்புழு உடல் மீது பட்டால் எரிச்சல் ஏற்படுத்தும்.
  • இதைக் கட்டுப்படுத்த பென்தியான் அல்லது மாலத்தியான் மருந்துகளை தெளித்தால் போதுமானது. பயிர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டால் எளிதில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *