அண்ணாமலை கத்தரி

 மரபீனி கத்தரிக்கு இந்தியா முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் மரபீனி கத்தரியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து விவசாயிகளின் தோட்டங்களில் சாகுபடி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்துறை உருவாக்கியுள்ள அதிக மகசூல் தரும் அண்ணாமலை கத்தரி, மரபீனி கத்தரிக்கு நல்ல மாற்றாக இருக்கும் என அண்ணாமலைப் பல்கலை. விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.

brinjal 

 

 

 

 

 

 

பாரம்பரிய மற்றும் இயற்கை சார்ந்த வேளாண்மை தொழில்நுட்பங்கள் கொண்டு அதிக உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் அதிக மகசூல் கொண்டு உருவாக்கப்பட்ட அண்ணாமலை கத்தரி, மரபீனி கத்தரிக்கு நல்ல மாற்றாக இருக்கும் என ராஜ்பிரவீன் தெரிவிக்கிறார்.

அண்ணாமலைப் பல்கலை. வேளாண்துறையில் 1968-69-ம் ஆண்டு வேளாண்துறை மாணவர் செல்லையாவால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும், கால்நடைகள் மற்றும் மனித உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உயர் விளைச்சல் தரும் ரகமாக உருவாக்கப்பட்டது அண்ணாமலை கத்தரி.

தற்போது சிதம்பரம் தாலுக்காவில் அண்ணாமலைப் பல்கலை. கிராமப்புற வேளாண் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தலைமையில் வேளாண் மாணவர்கள் மூலம் அண்ணாமலை கத்தரி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

அண்ணாமலை கத்தரி விதைகளை தொடர் விரிவாக்கத்துறை வாயிலாக பெற்று அண்ணாமலை கத்தரி சாகுபடி செய்து அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் பெற்று வருகின்றனர் விவசாயிகள்.

சிறப்புகள்:

  • அதிக மகசூல் தரும் இந்த கத்தரி பெரிதாகவும், ருசியாகவும் இருக்கும்.
  • அண்ணாமலை கத்தரி பன்னெடுங்காலமாக விவசாயிகளின் தோட்டங்களில், வீடுகளில் தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • குறிப்பாக பெண்களால் வீடுகளில் அமைக்கப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது. வீட்டு காய்கறித் தோட்டங்களில் முக்கிய காய்கறிப் பயிராக தொடர்ந்து சாகுபடி செய்யப்படுகிறது.
  • சுமார் 180 நாள்கள் வரை நல்ல மகசூல் தரும் அண்ணாமலை கத்தரி.
  • கத்தரி சாகுபடியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அசுவினிக்கு எதிராக வளரும் ரகமாக உருவாக்கப்பட்ட அண்ணாமலை கத்தரி, அசுவின்கான தேசிய சோதனை ரகமாகும்.
  • உயர் வேளாண் ஆராய்ச்சி அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்ட சிறப்பையும் பெற்றுள்ளது.
  • இதைத் தொடர்ந்து பாதுகாத்து அடுத்த பருவத்துக்கும் மறுதாம்புப் பயிராக சாகுபடி செய்ய முடியும். குறைந்த வேளாண் முதலீட்டில் அதிகளவு லாபம் பெற முடியும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “அண்ணாமலை கத்தரி

  1. S. Sabharathinam says:

    இதில் இக் கத்தரிக்காய் ரகத்தை உருவாக்கிய என் தந்தையின் பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை?
    Dr. C N சம்பந்தம், மேனாள் வேளாண் துறைத் தலைவர். அவரால் develop செய்யப்பட்டது இந்த ரகம்.
    ச. சபாரத்தினம்
    கோவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *