“நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவதன் மூலம், தரமான மகசூலை பெறலாம்’ என, எருமப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
- நாமக்கல்அடுத்த, எருமப்பட்டி வட்டாரத்தில், தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, சோளம் ஆகிய பல்வேறு பயிர்களை சாகுபடி செய்யத் துவங்கி உள்ளனர்.
- நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவதால், காய் தரமாக கிடைக்கிறது.
- மேலும், அதில் உள்ள கால்சியம், சல்பர் சத்தினால், ஓடுகள் கெட்டியாவதுடன், எண்ணெய் சதவீதமும் அதிகரிக்கும்.
- நிலக்கடலைக்கு ஒரு ஹெக்டேருக்கு, 200 கிலோ அடியுரமாகவும், 200 கிலோவை, இரண்டாம் களையின் போது மேலுரமாக இடுதல் வேண்டும்.
- பயறு வகைப்பயிர்களில், ஹெக்டேருக்கு, 110 கிலோ என்ற அளவில் இடுவதன் மூலம் தரமான மகசூல் பெறலாம்.
- ஸ்போடோப்டிரா மற்றும் ஹெலிகோவெர்பா புழுக்களைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப்பொறி, ஹெக்டேருக்கு, 12 என்ற அளவில் பொருத்த வேண்டும்.
- நிலக்கடலை பயிரை தாக்கும் தாய் அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த விளக்குப்பொறி, ஹெக்டேருக்கு, ஒன்று என்ற அளவில் பொருத்துவன் மூலம், பூச்சி மருந்து செலவுகளை குறைத்து தரமான மகசூல் மற்றும் அதிக லாபம் பெறலாம்.
- விளக்குப் பொறிக்கு 500 ரூபாயும், இனக்கவர்ச்சிப் பொறிக்கு, 216 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.
- மேலும், நிலக்கடலை நுண்ணூட்டமும் இருப்பில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்