பிசான பருவத்தில் தற்போது பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரியில் இலையழுகல் நோய் பரவலாக காணப்படுகிறது.
அறிகுறிகள்
- நெல் பயிரின் இலைகளின் அடிப்பாகமாகிய இலையுறைகளில் நீர் கோர்த்த புள்ளிகள் தோன்றும்.
- இவை பெரிய புள்ளிகளாக மாறி இலையழுகி சிம்புகள் அழுகிவிடும்.
- இதனால் சிம்புகள் கதிர்விடாமல் முழுமையாக அழுகிடும்.
- மேலும் பனி, மேகமூட்டம், குளிர்ந்த காற்று, குறைந்த வெப்பநிலையுடன் கூடிய சீதோஷ்ண நிலை நிலவுவதால் இந்நோய் அதிகம் பரவி மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கட்டுபடுத்தும் முறைகள்
- இந்நோயை கட்டுப்படுத்த கார்பன்டாசிட் ஏக்கருக்கு 250 கிராம் அல்லது டைத்தேன் எம் 45 அல்லது இசட் 78 அல்லது கெச்சாகாண்டசோல் 250 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து விசை தெளிப்பான் மூலம் ஏக்கருக்கு 8 டேங்க், கைத்தெளிப்பான் என்றால் ஏக்கருக்கு 12 டேங்க் வீதம் தெளிக்கவும்.
- தழைத்சத்து அதிகம் இடுவதை தவிர்க்கவும்.
- மேலும் ஏக்கருக்கு 17 கிலோ பொட்டாஷ் உரம் இடவும். நீரை வடித்துவிட்டு மருந்து தெளிக்கவும்.
- 3 நாட்கள் வரை தண்ணீர் அடைக்க வேண்டாம்
இவ்வாறு கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி: தினமலர்
நெற்பயிரை பற்றிய மற்ற செய்திகளை இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்