நிலக்கடலை சாகுபடி குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம்

“நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 மே 29ம் தேதி, நிலக்கடலை சாகுபடி குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, அதன் ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

  • நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 மே 29ம் தேதி, “நிலக்கடலை சாகுபடியும், களைக்கட்டுப்பாடு முறை’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்க உள்ளது.
  • பயிற்சியில், நிலக்கடலை சாகுபடியின் முக்கியத்துவம், மண் பரிசோதனை செய்தல், நிலம் தயார் செய்தல், களை நிர்வாகம் செய்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சியில், விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
  • விருப்பமுள்ள நபர்கள், வரும் 28ம் தேதிக்குள், நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்து, பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • அல்லது 04286266345, 04286266244, 04286266650 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கொள்ள வேணடும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *