“நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 மே 29ம் தேதி, நிலக்கடலை சாகுபடி குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, அதன் ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
- நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 மே 29ம் தேதி, “நிலக்கடலை சாகுபடியும், களைக்கட்டுப்பாடு முறை’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்க உள்ளது.
- பயிற்சியில், நிலக்கடலை சாகுபடியின் முக்கியத்துவம், மண் பரிசோதனை செய்தல், நிலம் தயார் செய்தல், களை நிர்வாகம் செய்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சியில், விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.
- விருப்பமுள்ள நபர்கள், வரும் 28ம் தேதிக்குள், நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்து, பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- அல்லது 04286266345, 04286266244, 04286266650 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கொள்ள வேணடும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்