வேகமாக மரம் வளர்க்கும் முறை !!

பொதுவாக மரம் வளர்க்க முறையான விதை போட்டு, நாற்று வைத்து வளர்த்தால் 2 ஆண்டுகளுக்கு மேல்தான் பலன் கொடுக்கும். இந்த வகையில் வேகமாக மரம் வளர்க்கும் முறை பற்றி இங்கு காண்போம்.

வேகமாக மரங்களை வளர்க்க ஆலமரம், அரச மரம், பு+வரசு, அத்தி மரம், வாகை போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

 

 

 

 

வளர்க்கும் முறை :

  •  மேற்கண்ட மரங்களை வளர்க்க அவற்றின் மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  •  அதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 14-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.
  • 30-வது நாள் இலைகள் வந்துவிடும். 70-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.
  •  செடி நடவு செய்து, அது மரமாக வளர சில ஆண்டுகளாகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நடவு செய்து மரங்களாக உருவாக்கலாம்.
  • இவ்வாறு செய்வதினால் விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்துவிடும்.

90 நாட்களில் மரம் வளர செய்ய வேண்டியவை :

  • ஒரு பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் குச்சிகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
  • ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, குச்சியின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
  • கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களை இட்டு, குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
  • நடப்பட்ட குச்சிகளை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
  • வேம்பு, அத்தி, மா, பு+வரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “வேகமாக மரம் வளர்க்கும் முறை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *