சுற்றுச்சூழல் மீதுள்ள அக்கறை, இயற்கை விவசாயம் மீதுள்ள ஆர்வம் போன்ற காரணங்களால், விவசாயத்தின் பக்கம் திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படிப் பட்டவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முனியசாமி. சிவகாசி அருகில் உள்ள விஸ்வநத்தத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தெற்கு ஆனைக்குட்டம் கிராமத்தில் முனியசாமி மானாவாரி விவசாயம் செய்து வருகிறார்.
அவர் தன் நிலத்தில் பயன் படுத்தும் சைக்கிள் உழவு கருவி பற்றி கூறுகிறார:
“பழைய சைக்கிளில் பின்பக்க வீல், பெடல், செயின் பாக்ஸ் ஆகியவற்றை எடுத்துவிட்டு பெடல் இருந்த இடத்தில் ஒரு இரும்புப்பட்டையை வெல்டிங் மூலம் இணைக்க வேண்டும். அதில் கொலுவை போல்ட், நட் கொண்டு இணைக்க வேண்டும். தேவைக்கேற்ப இரண்டு, மூன்று கொலுக்கள்கூடச் செய்து வைத்துக்கொள்ளலாம்.
களை எடுக்க 4 பல்கொண்ட கருவியையும் செய்துவைத்துக்கொள்ளலாம். உழவுக்கும் விதைப்புக்கும் ஒற்றைக் கொலுவைப் பயன்படுத்த வேண்டும். சீட் இருந்த இடத்தில் கைப்பிடியைப் பொருத்திச் சைக்கிளை முன்னோக்கித் தள்ளும்போது டயர் சுழலச் சுழலக் கொலு மண்ணைக் கிளறிவிடும்.
சாதாரணமாக அரை அடி ஆழமும், மண் பதமானதாக இருந்தால் முக்கால் அடி ஆழம் வரையும் கொலு இறங்கும். இக்கருவி மூலம் களை எடுக்கும்போது, களைகள் வேரோடு வந்து விடுகின்றன” என்கிறார் முனியசாமி.
தொடர்புக்கு,
முனியசாமி,
செல்போன்: 9655051239
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்