நம் நாட்டு ஆறுகள் எவ்வளவு மாசு பட்டுள்ளது என்பதை மத்திய மாசு கட்டுப்பாடு நிறுவனம் வெளியுட்டு உள்ளது.
காலிங்கராயன்
நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு இதற்கு ஒரு முக்கிய அளவுகோல்.
சாக்கடை நீர் மற்றும் ஆலைகளில் இருந்து வெளியே ஏறும் நீர் கழிவும் நீரில் உள்ள ஆக்சிஜன் குறைத்து நீரை உயிர் இழக்க செய்கின்றன. மீன்கள் சாகின்றன. நீரில் உள்ள BOD (Biological Oxygen Demand) படி ஆறுகளில் மாசு கணக்கிடப்படுகிறது.
இதன் படி 30மில்லிகிராம்/லிட்டர் இருந்தால் மிகவும் மாசு, 20-30 இருந்தால் அதற்கடுத்த மாசு, 10-20 இருந்தால் பரவாயில்லை. கடைசியாக 6-10 இருந்தால் வாவ், நீங்கள் அந்த நீரை அங்கேயே எடுத்து குடிக்கலாம்!
தமிழ்நாட்டில் ஆறுகளில் மாசு நிலவரம்:மிகவும் மாசு பட்ட இடங்கள்: (Category I)
- காவேரி – – மேட்டூர் இல் இருந்து மைலாடுதுறை வரை;
- சார்பங்கா நதி – தாதயம்பட்டி (சேலம் அருகே உள்ளது)
- மணிமுத்தாறு – சேலம் இருந்து பாப்பரப்பட்டி வரை
- வஷிஷ்ட ஆறு – மணிவிழுந்தான் முதல் த்யாகனுர் வரை (சேலம் மாவட்டம்)
மாசு பட்ட இடங்கள் (Category III)
- பவானி – சிறுமுகை முதல் காலிங்கராயன் வரை
- தாமிரபரணி – பாப்பான்குளம் முதல் தொருமுகனேரி வரை
இதில் எப்படி நொய்யல் கூவம் போன்றவை இல்லை என்று தெரியவில்லை!!
முழுமையாக படித்திட –CPCB website
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்