இயற்கை விதை நேர்த்தி பீஜ மித்ரா செய்வது எப்படி

நம் நாட்டில் பசுமை புரட்சி வருவதற்கு முன்னால் நம் விவசாயிகள் நாட்டு பசு சாணம் மற்றும் மூத்திரம் மூலம் விதை நேர்த்தி செய்து வந்தனர்.
மிகவும் திறமை வாய்ந்த இந்த முறை பசுமை புரட்சி வந்த பின் மறக்கடிக்க பட்டது. இதற்கு பதிலாக விஷ ரசாயன பூச்சி மருந்துகள் பரிந்துரை செய்ய பட்டன.
இவற்றால், நிலத்தில் உள்ள நன்மை தரும் பூஞ்சணங்களும், பூச்சிகளும் கொள்ள பட்டன.

இப்போது ஜீரோ பட்ஜெட் விவசாயம் பரப்பி வரும் சுபாஷ் பலேகர் மறக்கடிக்க பட்ட இந்த முறையை பீஜ மித்ரா என்று விவசாயிகளுக்கு சொல்லி கொடுக்கிறார்.

பீஜ மித்ரா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :20 லிட்டர் நீர், 5 கிலோ நாட்டு பசு சாணம், 5 லிட்டர் நாட்டு பசு மூத்திரம், 50 கிராம் சுண்ணாம்பு, நிலத்தில் இருந்து எடுக்க பட்ட ஒரு கை மண் எடுத்து கொள்ளவும்

 

 

 

 

 

2. 5 கிலோ நாடு பசு சாணத்தை எடுத்து ஒரு துணியில் கட்டி டேப் மூலம் கட்டவும். 20 லிட்டர் நீரில் 12 மணி தொங்க விடவும்

 

 

 

3. ஒரு லிட்டர் நீர் எடுத்து 50 கிராம் சுண்ணாம்பை இட்டு வைக்கவும்

 

 

 

 

 

4.  அடுத்த நாள் காலை, சாணம் கட்டி வைத்த மூட்டையை எடுத்து இந்த நீரில் அழுத்தவும் (Squeeze)

 

 

 

 

 

 

5. கைப்படி மண்ணை எடுத்து இந்த கலவையில் சேர்த்து நன்றாக கலக்கவும்

 

 

 

 

 

 

6. 5 லிட்டர் நாட்டு பசு மூத்திரத்தை இதனுடன் கலந்து சுண்ணாம்பை சேர்த்து, வடி கட்டவும் இப்போது பீஜ மித்ரா ரெடி

 

 

 

 

 

 

பயன் படுத்தும் முறை:


கையால் விதைகளை பீஜ மித்ராவில் ஊற வைத்து, காய வைத்து விதைக்கவும்

 

 

 

 

நன்றி: ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பலேகர் இனைய தளம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *