கேரளாவின் வீட்டுத்தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு, திண்டுக்கல்லிருந்து இயற்கை உரம் அனுப்பி வைக்கப்படுகிறது.
திண்டுக்கல் சிலுவத்துார் ரோட்டில் உள்ளது கம்பிளியம்பட்டி. இங்குள்ள இயற்கை விவசாயி காளியப்பன், 48.
இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் தென்னந்தோப்பில், 100 செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள் வளர்த்து வருகிறார். இதில், தினமும் சேரும் ஆடுகளின் கழிவுகளை சேகரிக்கிறார். சேகரித்த கழிவுகளை 10 அடி நிலப்பரப்பில் பரப்புகிறார்.
‘அடிக்கடி கிளறிவிட்டு’ 4 நாட்கள் பதப்படுத்தி நீர் தெளிக்கிறார். நீரின் ஈரப்பதம் இருநாட்களும், சூரிய வெப்பம் 2 நாட்களும் சேர்த்து 48 மணி நேரம் பதப்படுத்திய இயற்கை உரம் தயாராகிறது.
இதை 35 கிலோ மூடையில் அடைத்து ரூ.55க்கு கேரள வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல்லில் இருந்து, கேரளாவின் பாலக்காடு, சித்துார், கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. விவசாயி காளியப்பன் கூறுகையில், ‘செம்மறி ஆடுகள் கழிவுகளோடு, ஆட்டின் முடிகளும் மக்கி கழிவுகளாக மாறுவதால், இயற்கை சத்துக்கள், நுண்ணாட்டச் சத்துக்கள் அதிகரிக்கிறது. இதை பதப்படுத்தி, வாரம் இருமுறை டெலிவரி செய்கிறோம், என்றார். ‘09786296145’ என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
நன்றி: தினமலர்
தமிழகத்தில் திண்டுக்கல் அருகே இருக்கும் தமிழ் விவசாயிகளும் இதை பயன் படுத்தலாம்!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்