சோளம், மக்காச்சோளம் மற்றும் சிறுதானியப் பயிர்கள் சாகுபடி குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2015 ஆகஸ்ட், 5ம் தேதி காலை, 9 மணிக்கு நடக்கிறது.இது குறித்து, பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மோகன் வெளியிட்ட அறிக்கை:
பயிற்சி முகாமில் சோளம், மக்காச்சோளம் மற்றும் சிறுதானியப்பயிர்கள் சாகுபடியின் முக்கியத்துவம், அதிலுள்ள சத்துக்கள், ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், பயிர் இடைவெளி, மண்பரிசோதனை, விதைக்கும் முறைகள், உர நிர்வாகம் (நுண்ணூட்ட உரம் மற்றும் உயிர் உரம்), களை நிர்வாகம், பல்வேறு வகையான களைக்கொல்லிகளை உபயோகப்படுத்தும் வழிமுறைகள், நீர் நிர்வாகம், சொட்டுநீர்ப்பாசனம், ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் குறித்து விளக்கப்படும்.
மேலும் இப்பயிற்சியில் மானாவாரி பயிர்களுக்கான விதை கடினப்படுத்துதல் குறித்த செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்படவுள்ளது.இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ, 04286266345 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு, ஆகஸ்ட், 4ம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்