சிறுதானிய பயிர் சாகுபடி பயிற்சி

“மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், (கே.வி.கே.,) வரும், 2014 அக்டோபர் 7ம் தேதி நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்தல், வீரிய ஒட்டு ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், களை நிர்வாகம், மண்ணின் ஈரத்தன்மை பாதுகாக்கும் தொழில்நுட்பம், ஊட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி செய்யும் முறை, பூச்சி நோய் நிர்வாக முறை உள்ளிட்ட ஒரு நாள் இலவச பயிற்சி முகாம், வரும், 2014 அக்டோபர் 7ம் தேதி , காலை, 9 மணிக்கு நடக்கிறது.

எனவே, விருப்பமுள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 6ம் தேதிக்குள், தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 04286266 345 என்ற தொலைபேசி எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *