விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் பெற்று தரும் மரங்களில் தென்னை மரமும் ஒன்று. அந்த தென்னை மரங்களை வளர்க்க தேவைப்படும் தாய் தென்னை மரங்களை தேர்ந்தெடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தென்னை வளர்ப்பில் நஷ்டம் ஏற்பட வாய்ப்;பு உண்டு. இங்கே தாய் தென்னை மரங்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பற்றி காண்போம்.
தென்னையின் ரகங்கள் :
- தென்னை மரங்களில் பல்வேறு இயல்புகள் கொண்ட ரகங்கள் காணப்படுகின்றன. நமது நாட்டில் மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என்ற இரண்டு ரகங்கள் பரவலாக காணப்படுகிறது.
- மேற்கு கடற்கரை நெட்டை ரகங்கள் தடித்து பருமனாகவும், பெரிதாகவும் இருக்கும். இது ஆண்டுக்கு 80-100 காய்கள் காய்க்கும்.
- கிழக்கு கடற்கரை நெட்டை ரகங்களின் காய்கள் பருமன் சற்று குறைந்து காணப்படும். இது ஆண்டுக்கு 100-120 காய்கள் வரை காய்க்கும்.
- தழிழகத்தில் ஈத்தாழி நெட்டை, அய்யம்பாளையம் நெட்டை போன்ற பல்வேறு ரகங்கள் காணப்படுகின்றன.
தாய் மரத்தின் குணம் :
- தேர்வு செய்யப்படும் தாய் மரமானது இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் தஞ்சை வாடல் நோய் போன்ற நோய்களால் தாக்கப்படாமல் இருக்க வேண்டும்.
- மேற்கண்ட நோய்களால் தாக்கப்பட்ட மரங்கள் உள்ள தோப்பில் மற்ற ஒரு சில மரங்கள் இந்த நோய்களினால் தாக்கப்படுவதில்லை. அத்தகைய வலுவான நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மரங்களை தாய் மரங்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
- 4 முதல் 5 ஆண்டுகளில் காய்க்க தொடங்கிய மரங்களில் இருந்து தாய் மரங்களை தேர்ந்தெடுக்கலாம்.
- ஒவ்வொரு ரகத்தின் விளைச்சலை ஒப்பிட்டு பார்த்து அதன் மூலமும் தாய் மரங்களை தேர்ந்தெடுக்கலாம்.
- நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வீரியம் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.
நடவு செய்யும் குழியின் அளவு :
- தென்னங்கன்றுகளை வாழை போன்ற மரங்கள் நடப்படும் சிறிய குழிகளில் நடாமல் 3 அடி ஆழம், 3 அடி அகலம் உள்ள குழிகளில் நட வேண்டும்.
- 3 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் 1 அடி ஆழத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட மண்ணை, வேர்பகுதியில் வேர்களுடன் காணப்படும் காய்ப்பகுதி ஒரு அடி இருக்குமாறு கையால் ஒரு அடி குழி எடுத்து காயை குழியில் பதித்து குழியை மூடி விட வேண்டும்.
- பின்னர் ஒரு வாரம் கழித்து நீர் பாசனமுறைப்படி நீர் பாய்ச்ச வேண்டும். தேவைப்பட்டால் தென்னை அல்லது பனை ஓலையை வைத்து வெயில் படாதவாறு 3 மாதம் வரை பாதுகாக்கலாம்.
- தென்னங்கன்றுகளை நட்டபின் குழியினுள் 2 அடி ஆழம் இருக்க வேண்டும். இந்த நிலையில் காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி இருந்தால் வண்டு தாக்குதலும், குருத்தோலை தாக்கப்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்