தென்னை மரம் ஏறுதல்கருவி மூலம் பயிற்சி

தென்னம் மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். பல வீடுகளில் தென்னை மரங்களில் நிறைய தேங்காய்கள் இருந்தாலும் பறிக்க ஆள் இல்லாமல் இருப்பது இப்போது  நாம் எல்லாரும் பார்க்கும் நிலைமை… இதை போக்கி மரம் ஏற பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்பை அதிகரிக்கும் ஒரு செய்தி இதோ..
கிராமபுற இளைஞர்களுக்கு, தென்னை மரத்தில், கருவி மூலம் ஏறுதல் குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.இது குறித்து, கிருஷ்ணகிரி டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுந்தர்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

  • சென்னை தென்னை வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து, டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், தென்னை மரம் கருவி மூலம் ஏறுதல் குறித்து, ஆறு நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
  • இப்பயிற்சி, எலுமிச்சகிரியில் உள்ள அறிவியல் மையத்தில் நடத்தப்படுகிறது.
  • வரும், 2015 ஜனவரி 20ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடக்கும் இப்பயிற்சியில், 100 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஐந்து குழுக்களாக பிரித்து, பயிற்சி அளிக்கப்படும்.
  • பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, தங்கும் வசதி மற்றும் உணவு வழங்கப்பட்டு, பயிற்சி முடிவில் சான்றிதழும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், விபத்து காப்பீடு மற்றும் தென்னை மரம் ஏறும் ஒரு கருவியும், இலவசமாக வழங்கப்பட உள்ளது.
  • இப்பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பும், 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • தகுதியும், விருப்பமும் உள்ள கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள், தங்கள் பெயரை வரும், 17ம் தேதிக்குள், வேளாண் அறிவியல் மையத்தினை நேரடியாகவோ அல்லது, 04343296039, 09443796968 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *