மழையை பயன்படுத்தி தென்னைக்கு உரமிட்டால் அதிக மகசூல்

தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) தயாளன். விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia
  • தற்போது பெய்து வரும் நல்ல மழை தென்னைக்கு உரமிடுவதற்கு ஏற்றதாகும்.
  • எனவே மழையை பயன்படுத்தி நாட்டு ரக (நெட்டை ரகம்) தென்னை ஒரு வருட கன்றுக்கு தொழு உரம் 10 கிலோ, யூரியா 325 கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 500 கிராம், வேப்பம்புண்ணாக்கு ஒன்றரை கிலோவும், இரண்டு வருட கன்று ஒன்றுக்கு இரண்டு மடங்காகவும் இவ்வாறு 5 வருட கன்றுகள் வரை வேளாண் அதிகாரிகளின் பரிந்துரைப்படி உரமிட வேண்டும்.
  • ரக தென்னைகளுக்கு ஒரு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 15 கிலோ, யூரியா 500 கிராம், சூப்பர் 375 கிராம், பொட்டாஷ் 750 கிராம், வேப்பம்புண்ணாக்கு 1.500 கிலோவும், இரண்டு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 30கிலோ, யூரியா 1 கிலோ, சூப்பர் 750கிராம், பொட்டாஷ் 1.500 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 2.500கிலோவும் என 4 வருட கன்றுகள் வரை பரிந்துரைப்படி உரமிட வேண்டும்
  • மேற்கண்ட உர பரிந்துரை அளவினை சம பங்காக பிரித்து வருடத்தில் இரு முறை இட வேண்டும், அதாவது மார்கழி, தை மாதங்களில் ஒரு முறையும், ஆனி, ஆடி மாதங்களில் ஒரு முறையும் இட வேண்டும்.
  • 30 முதல் 45 நாட்கள் கழித்து தென்னை நுண் சத்து உரத்தினை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும்.
  • இவ்வகை உரங்களை மரத்தை சுற்றி 5 அடி தூரத்தில் இட்டு மண்ணை கிளறிவிட்டு உடனடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும், முறையாக உரமிடும் பட்சத்தில் குரும்பை உதிர்தல், ஒல்லிக்காய், காய்களில் வெடிப்பு, நீள வடிவிலான வெற்றுகாய்கள் ஆகிய பிரச்சனைகள் குறைந்து ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 150 முதல் 200 தேங்காய்கள் வரை மகசூல் எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *