நிலகடலையில் ஊடுபயிர்

நிலகடலையில் ஊடுபயிர் இட்டால், மகசூல் அதிகம் ஆவதுடன், பூச்சி தாக்குதலையும் கட்டு படுத்தலாம்

நிலகடலையின் ஊடு பயிராக துவரை, ஆமணக்கு, காராமணி, கம்பு போன்றவற்றை பயிர் இடலாம். துவரை மற்றும் காராமணியை 6:1 என்ற விகிதத்தில் இடலாம். இது தழை சத்தை நிலை படுத்தும். ஆமணக்கு பயிரை வரப்பு பயிராகவோ கலந்தோ பயிர் இடலாம்.

பூச்சிகள் முதலில் இலைகள் அகலமாக இருக்கும் துவரை மற்றும் காராமணி பயிரை தான் முதலில் தாக்கும். இவற்றை பயிர் பாதுகாப்பு செய்து நிலகடலையை பாதுகாக்கலாம். கம்பை என்ற 4:1 விகிதத்தில் இட்டால் நிலகடலையில் சுருள் பூச்சி தாக்குதலில்   இருந்து தவிர்க்கலாம்.

நன்றி: தினத்தந்தி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *