அரிசியை வேக வைக்காமல் சாதம் ஆக்க முடியுமா?

கட்டக் நகரில் உள்ள மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம், (Central Rice Research Institute )  ஒரு புது விதமான அரிசி கண்டு பிடுத்திருக்கிறது.

இந்த அரிசியை, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்தால் போரும். நல்ல வேக வெய்த்த சாதம் போல அந்த அரிசி மாறி விடுகிறது.

இந்த அரிசிக்கு அகோநிபோஹ்ரா என்ற பெயர் இட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த அரிசியில் amylose  மிகவும் குறைந்து இருப்பதால், வேக வைக்க தேவை இல்லையாம். அரை மணி நேரம் தண்ணீரில் ஊறினால், வேக வாய்த்த சாதம் போல் மாறி விடுகிறது ரொம்ப அதிசயம் தான்! 100  முதல் 145  நாள் வளரும் இந்த அரிசி, ஒரு ஹெக்டருக்கு நான்கு முதல் ஐந்து டன் அரிசி விளைப்பு தருகிறது. அசாமில் இந்த அரிசியை முதலில் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

அது சரி, இந்த சாதம் சாப்பிட இந்த அரிசி எப்படி இருக்கிறது? நன்றாகவே இருக்கின்றது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதன் மூலம், சமையல் செய்யும் கெரோசின், LPG , எல்லாம் மிச்சமாகும் கூட! நம்ப முடியவில்லையா? மேலும் விவரங்களுக்கு: எகோநோமிக் டைம்ஸ்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *