தழை சத்து உரம்

விவசாயத்தில் உற்பத்தி செலவை குறைக்க, நெல் பயிரிடும் விவசாயிகள், சாணம் எருவினை காட்டிலும் தழை சத்து உரம் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியத்தில், விச்சூர், கரும்பாக்கம், தென்பாதி, அரும்புலியூர் போன்ற பகுதிகளில் நெல் பயிரிடும் பெரும்பாலான விவசாயிகள், தழை சத்து உரத்தை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

நிலத்தில் தழை சத்து விதைகள் விதைத்து, 2 மாதங்கள் வளர செய்து, பின் நிலத்தில் நீர் பாய்ச்சி, ஏர் உழுது, தழைகளை நிலத்திற்கு உரமாக்கி, பின்னர் அடுத்த பயிரை நடவு செய்கின்றனர். இதனால், செலவு குறைந்து விவசாயத்தில் கணிசமான லாபம் கிடைப்பதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

தென்பாதி விவசாயி ஆறுமுகம் கூறியதாவது:

  • நெல் பயிரிடும் விவசாய நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 5 டிராக்டர் வண்டி சாணம் எரு தேவையாக உள்ளது. இதற்கு, வண்டி கூலி மற்றும் ஏற்றுமதி செலவு உட்பட 5,000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது.
  • தற்போது அவுரி, தக்கை பூண்டு போன்ற தழை சத்து உரங்கள் பயன்படுத்த துவங்கி உள்ளோம்.
  • தழை சத்து செடி விதைகள் கிலோ ஒன்றுக்கு, 55 ரூபாய் வீதம் ஏக்கருக்கு, 15 கிலோவில் இருந்து, 20 கிலோ வரை தேவையாக உள்ளது.
  • இவ்விதமான பயன்பாட்டிற்கு, விதைத்தல், ஏர் உழுதல் செலவு உட்பட 2,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது. மேலும், பயிருக்கு தேவையான சத்து கிடைத்து வளமாக விளைச்சல் கிடைக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *