நெற்பயிரில் இலைப் புள்ளி நோய்

அறிகுறிகள்

  • நெற்பயிரில் முதலில் இந்நோய் மிகச்சிறிய பழுப்புப் புள்ளிகளாகத் தோன்றும். பின் உருளை (அ) முட்டை வடிவமாக இருந்து வட்ட வடிவப் புள்ளிகளாக மாறிவிடும்.
  • இந்நோய் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் கதிர் மற்றும் கழுத்துப் பகுதியை தாக்கும்.
  • விதைகளும் தாக்கப்படுகின்றன. (விதை உறையின் மேலுள்ள புள்ளிகள் கருப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளிகளாக இருக்கும்). இவை மென்பட்டுத் துணி போன்று காணப்படும்.
  • நாற்றுக்கள் மடிந்தும் நோய் தாக்கப்பட்ட நாற்றங்கால் சற்று தொலைவிலிருந்து பார்க்கும்போது பழுப்பு நிற துரு ஏறிய பயிர்கள் போன்றும் காட்சியளிக்கும்.
  • விதை உறையில் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
  • விதை முளைப்பு திறன் பாதிக்கப்படுவதோடு நாற்றுக்கள் மடிந்துவிடும். தானியத் தரம் மற்றும் அதன் எடையும் குறைகிறது.
  • தீவிர நோய் தாக்குதலின் போது 50% மகசூல் குறைவு ஏற்படுகிறது.
    இலைகளில் வட்ட (அ) நீள்வட்ட புள்ளிகள் காணப்படும் இலைகளல் பழுப்பு நிற விளிம்புடன் கூடிய புள்ளிகள் காணப்படும் பூங்கொத்து, கதிர்களில் அடர் பழுப்பு (அ) கருப்பு புள்ளிகள் காணப்படும்

சாதகமான சூழ்நிலை

தழைச்சத்து மற்றும் சாம்பல்சத்து குறைபாடு கொண்ட நடவு வயலில் இந்நோயின் தீவிரம் சற்று அதிகமிருக்கும்.  நோய்க்கு அதிக சாதகமான காலநிலை நிலவும்போது 90 சதம் மகசூல் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நோய் பரவும் முறைகள் மற்றும் ஏதுவான தட்பவெப்ப நிலை

  • நோயால் பாதிக்கப்பட்ட விதைகள் மூலம் பரவும் நெற்பயிர் குடும்பத்தை சார்ந்த மற்ற களை செடிகள் மீது இப் பூசணங்கள் உயிர் வாழ்கின்றன. விதைகளில் 4 வருடங்களுக்கு மேல் வாழக்கூடியவை. நோய் தாக்கப்பட்ட விதைகள், தன்னிச்சையாய் வளர்ந்த நெற்பயிர், நோய் தாக்கப்பட்ட நெற்பயிர், சில களைச் செடிகள் வயலில் நோய் பரவுவதற்கான முக்கிய மூலங்கள். காற்றுவழியாக நோயக்காரணி பரவுகிறது.
  • ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள மண்ணிலும், நீர் தேங்காத மண்ணிலும் இந்நோய் தாக்குதல் இருக்கும். ஆனால் நெற்பயிரை எளிதில் தாக்காது.
  • ஊட்டச்சத்து தனிமங்கள் பற்றாக்குறை இருக்கும் மண் அல்லது நஞ்சுப் பொருள்கள் தேக்கம் உள்ள மண்ணிலும் இந்நோய் பரவும்.

மேலாண்மை முறைகள்

  • வயல் மற்றும் வரப்புகளை களையின்றி வைத்திருப்பதால் நோயின் தாக்குதலைக் குறைக்கலாம்.
  • நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட இரகங்களான ஏடீடி 44, பீஒய் 4, கோஆர்ஹச் 1, கோ 44, காவேரி பவானி, டிபிஎஸ் 4 மற்றும் தனு ஆகியவற்றை பயிரிடுதல்.
  • நோயற்ற விதைகளைத் தேர்வு செய்து நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
  • பயிர் வளர்ச்சிக்கேற்ற முறையான ஊட்டச்சத்துக்களை அளித்தல் மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கவேண்டும்.
  • கேப்டன் அல்லது திரம் @ 2.0 கிராம்/கிலோ விதையுடன் விதை நேர்த்தி செய்தல்வேண்டும்.
  • திரம் அல்லது கேப்டான் (2 கிராம், கிலோ) கொண்டு விதை நேர்த்தி செய்தல் மற்றும் எடிபென்பாஸ் (40 மி.லி.) மேங்கோசெப்-80 கிராம் அல்லது கேப்டோபால் 40 கிராம் 8 சென்ட் நாற்றங்காலுக்கும் நடவு வயலில் எக்டெருக்கு எடிபென்பாஸ்-500 மி.லி. அல்லது மேங்கோசெப் 1 கிலோ, தெளிப்பதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • பூத்தல் பருவம் மற்றும் அதற்கு பின் பருவங்களிலும், முன் வேளையில் அல்லது மதிய வேளையில் தெளித்தல் வேண்டும்.
  • கிரிசெப்ஃபுல்வின், நிஸ்டேடின், ஆரியோஃபங்கின் என்ற உயிர் எதிர்ப்புப் பொருள்கள் நாற்றுக்களில் தாக்குதலைத் தடுக்கின்றன.
  • டிரைசைக்லசோன் உடன் விதை நேர்த்தி செய்து அதனைத் தொடர்ந்து மேன்கோசெப் + ட்ரைசைக்லசோன் கலவையைத் துார் வைக்கும் பருவத்திலும் கதிர் உருவாக்கத்திற்குப் பின் நிலைகளிலும் தெளித்தல்வேண்டும்.
  • சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸை 10 கிராம்/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து 2.5 கிலோ /எக்டர் என்ற அளவில் 100 லிட்டர் நீருடன் கலந்து 30 நிமிடங்கள் நாற்றுக்களை நனைத்து பின் நட வேண்டும்.

நன்றி:  தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம்

ஏ.டீ.டி. 44 எதிர்ப்பு திறன் இரகம் ஆரியோபஞ்சின் உயிர் கொல்லி மருந்து பயன்படுத்தவும்
ஆரியோபஞ்சின் உடன் விதை நேர்த்தி செய்யவும் சூடோமோனாஸ் உடன் விதை நேர்த்தி செய்யவும்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *