நெற் பயிரில் படைப்புழு தாக்குதல்கட்டுப்படுத்தும் முறைகள்

நெற் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் ஐரிஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

  • படைப்புழுவின் தாக்குதல் தீவிரமாகும் பட்சத்தில் பெரிய அளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
  • படைப்புழுவானத நெற் பயிர் தூர் கட்டும் பருவத்தில் தாக்கும் போது இலை யூனிகளியோ அல்லது இலையின் ஓரத்தையோ வெட்டி உணவாக உடற்கொள்கிறது.
  • பெரும்பாலும் நடு நரம்பு தவிர பிற இலைப்பகுதி முழுவதையும் உண்டுவிடும்.
  • சில நேரத்தில் முழு இலையினையும் உண்கிறது. இதன் பாதிப்பால் மாடு மேய்ந்தது போன்ற தோற்றத்தை பயிர் அளிக்கும்.
  • மேலும் தூரின் அடிப்பகுதி மற்றும் கதிரின் அடிப்பகுதியை வெட்டி விடும்.
  • தண்ணீர் வடிக்கப்பட்ட வயல்களில் இப்பூச்சி தாக்குதல் அதிகமாக தென்படும்.
  • காலை, மாலை மற்றும் இரவு நேரத்தில் இப்புழுக்கள் நெற் பயிரை தாக்குவதாலும், பகல் நேரத்தில் நெற் பயிர் தூரின் மையப்பகுதி, புல்களின் அடிப்பகுதி மற்றும் வரப்புகளில் உள்ள சிறிய இடைவெளிகளில் மறைந்து கொள்வதாலும் இப்புழுக்களை எளிதாக காண்பது இயலாது.
  • நெற் பயிரில் இலை வெட்டப்பட்டிருக்கும் விதத்தை பார்த்து இப்புழுக்களின் நடமாட்டத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
  • படைப்புழு நடமாட்டம் தென்பட துவங்கியவுடன் ஒரு ஏக்கருக்கு புவேரியா பெசியானா 400 கிராம் அல்லது பேசில்லஸ் துரின்சியன்சிஸ் 400 மில்லி ஆகியவற்றில் ஒன்றை தெளிக்க வேண்டும்.
  • ஒரு குத்துக்கு ஒரு படைப்புழுவிற்கு மேல் இருக்கும் போது டைகுளோர்வாஸ் 250 மில்லி, குளோர்பைரிபாஸ், டிரையசோபாஸ், புரோபனோபாஸ் 400 மில்லி மருந்து இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை 200 லிட்டர் நீர் உபயோகித்து மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *