நெல் குலைநோயை கட்டுப்படுத்த சூடோமோனஸ்

நெல் குலைநோய் மற்றும் இலை உறைக்கருகல் நோயை கட்டுப்படுத்த உயிர் எதிர் கொல்லியான சூடோமோனஸ் பிளோரசன்ஸ் பயன்படுத்த வேண்டும்’ என கீழப்பாவூர் உதவி வேளாண்மை இயக்குநர் நல்லமுத்து ராசா விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

  • நெல் பயிரில் குலைநோய் மற்றும் இலை உறைக்கருகல் நோயை கட்டுப்படுத்த சிறந்த உயிர் எதிர்கொல்லியாக சூடோமோனஸ் பிளோரசன்ஸ் திகழ்கிறது.
  • சூடோமோனஸ் நுண்ணுயிரியானது விதை மற்றும் மண் வழி பரவும் நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • பயிரில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்ட வல்லது. உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உடன் கலந்து இதனை பயன்படுத்தலாம்.
  • விதை நேர்த்தியாக, 10 கிரோம் சூடோமோனஸை ஒரு லிட்டர் நீரில் கரைத்து அதில் ஒரு கிலோ விதையை 24 மணி நேரம் ஊற வைத்து விதைக்க வேண்டும்.
  • நடவுக்கு முன்பாக ஒரு ஏக்கருக்கான நெல் நாற்றுகளின் வேர்களை ஒரு கிலோ சூடோமோனஸ் கரைசலில் அரை மணி நேரம் ஊற வைத்து நடவு செய்ய வேண்டும்.
  • நடவு வயலில் நடவுக்கு பின் 30 நாட்கள் கழித்து ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் சூடோமோனஸ் தேவையான அளவு நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து இட வேண்டும்.
  • தெளிப்பு முறையில் 0.2 சதவீத சூடோமோனஸ் கரைசலை (அதாவது 1 லிட்டர் நீருக்கு 2 கிராம்) நடவுக்கு பின்னர் 45 நாட்கள் கழித்து நோய்களின் தீவிரத்தை பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கலாம்.
  • சூடோமோனஸ் நுண்ணுயிர்கள் வேளாண் விரிவாக்க மையங்களிலோ, நெல்லை உயிரியில் உற்பத்தி மையங்களிலோ விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *