நெல் பயிரிடப்படாத நிலங்களில், விவசாயிகள், பச்சை பயறு பயிரிட்டு உள்ளனர். மீஞ்சூர் ஒன்றியம், அக்கரம்பேடு, வெள்ளம்பாக்கம், உத்தண்டிகண்டிகை உள்ளிட்ட இடங்களில், நிலத்தடி நீரின் உவர்ப்பு காரணமாக நெல் பயிரிடவில்லை.
தற்போது அங்கு, பச்சை பயறு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.
பனியின் ஈரப்பதம் இருப்பதாலும், மழை மற்றும் நிலத்தடி நீரின் தேவை அதிகம் இருக்காது என்பதாலும், தரிசாக கிடந்த நிலங்களில் பச்சை பயறு பயிரிடப்பட்டு உள்ளன.பயிரிடப்பட்டுள்ள பச்சை பயறு செடிகளில் பூக்கள் பூத்தும், பிஞ்சுகளும் வளரத் துவங்கிஉள்ளன.
குறைந்த முதலீடு, குறைந்த பயிர்காலம் என்பதால், இதில் ஈடுபடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஒரு ஏக்கருக்கு, 8 – 10 கிலோ விதை பயறு விதைக்கப்படுகிறது. ஒரு கிலோ விதை பயறு, அரசு மானிய விலையில், 65 ரூபாய்க்கும்; சந்தை விலையில், 80 ரூபாய்க்கும் கிடைக்கிறது.
விதைக்கப்பட்ட, 50 முதல் 60 நாட்களில், அறுவடை செய்யப்படுகிறது.இரண்டு முதல், நான்கு மூட்டை வரை பச்சை பயறு மகசூலும், சந்தை நிலவரத்திற்கேற்ப விலையும் கிடைக்கும்.
கடந்தாண்டு, 100 கிலோ மூட்டை ஒன்று, 6,000 ரூபாய் வரை கிடைத்தது. அதே போன்று விலை இருக்கும் என்ற நம்பிக்கையில், தரிசாக கிடந்த நிலங்களில் பச்சை பயறு பயிரிடப்பட்டு உள்ளது.
நன்றி:தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்