பார்த்தீனியம் அழிக்கும் முறைகள்

ராவுத்தப்பேரியில் நடந்த முகாமில் பார்த்தீனியம் விஷசெடி ஒழிப்பு முறைகள் பற்றி வேளாண்மை இணை இயக்குநர் சவுந்திராஜ் விளக்கினார்.

  • ஹிஸ்டிரோ போராஸ் என்ற விஷத்தன்மை வாய்ந்த களை எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலையிலும் வளரக்கூடியது.
  • இது நீண்ட காலத்துக்கு சுமார் 30 ண்டுகள் வரை முளைப்புத்திறன் கொண்ட விதைகளை அதிகளவில் உற்பத்தி செய்கிறது.
  • இவை காற்றின் மூலம் மிக வேகமாக பரவக்கூடியவை.
  • ஒரு ஆண்டு விதைப்பு ஏழு ஆண்டுகளுக்கு களையெடுப்பு என்ற கருத்து பார்த்தீனியத்தை பொறுத்தவரை உண்மையாக உள்ளது.
  • ஒரு செடியில் சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விதைகள் உருவாகின்றன.
  • இவை முதிர்ச்சி பெறாத நிலையில் கூட வளரக்கூடிய தன்மை உடையவை.
  • வறண்ட கோடை மாதங்களில் பார்த்தீனியம் ஒரு ரொசேட் வடிவத்தில் தோன்றுகிறது.ஆனால் மழை காலத்தில் சுமார் 90 சென்டி மீட்டர் வரை வளர்வதேடு பசுமையான இலைகளுடன் அதிகளவில் பூக்கின்றன.
  • இச்செடியானது ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது.
  • இக்களைகள் கால்நடைகளில் சரும ஒவ்வாமையின்மையையும், செம்மறி ஆடுகளில் விஷத்தன்மையினையும் ஏற்படுத்துகின்றது.
  • மேற்கண்ட பாதிப்புகளுக்கான முழுக்காரம் பார்த்தீனின் என்னும் நச்சு ஆகும்.

இக்களையினை கட்டுப்படுத்தும் முறைகள் வருமாறு:
கைவினை முறை:

  • களை மண்ணில் இருந்து வெளிப்படும் போது இம்முறையினை பயன்படுத்தலாம்.
  • அதிக பரப்பில் காணப்படும் போது கை களை எடுக்கும் முகாம்கள் நடத்தலாம்.
  • பயிர் சுழற்சி பயிர் சாகுபடி உள்ள நிலத்தில் மழைக்காலத்தில் பயிருடன் சாமந்தியினை சுழற்சி முறையில் சாகுபடி செய்து கட்டுப்படுத்தலாம்.

அல்லிலோபதிக் விளைவு:

  • இக்களையினை கேசியா செரிசியா என்னும் தாவரம் மூலம் கட்டுப்படுத்தலாம்.

மக்க வைத்தல்:

  • பார்த்தீனியம் விஷ செடி களையில் பூக்கும்போதே மக்கவைத்து உரமாக்கும் முறையினை பயன்படுத்தி அதிக வெப்பத்தின் மூலம் விதை முளைப்புத்தன்மையை அழிக்கலாம்.

ரசாயன முறை:

  • தரிசு நிலங்களில் திறந்தவெளி, சாலையோரம் மற்றும் ரயில் இருப்புப்பதை ஓரங்களில் அதிகளவில் இதுபோன்ற நிலங்களில் 15 முதல் 20 சதவீத சமையல் உப்பு கரைசல் தெளிப்பதன் மூலம் இக்களையினை கட்டுப்படுத்தலாம்.
  • ஒட்டும் திரவத்துடன் 2,4-டி-2.5 கிலோ கிராம் எக்டர் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்
  • பயிர் சாகுபடி உள்ள நிலங்களில் களைக்கொல்லிகள் பெரியளவில் பயன்படுத்தலாம்.
  • சோளம், மக்காச்சோளம், கரும்பு பயிர்களில் சிமாசின் அட்ரசின் களைக்கொல்லியினையும் பயிறு வகை மற்றும் பருத்தி பயிர்களில் அலக்குளோர் மற்றும் பூட்டோகுளோர் களைக்கொல்லியினை முறையே பயன்படுத்தி பார்த்தீனியம் விஷ செடிகளை அழிக்க வேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “பார்த்தீனியம் அழிக்கும் முறைகள்

  1. 2008rupan says:

    வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது முதலில் வாழ்த்துக்கள்… சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_24.html?showComment=1390519247701#c4761600294553611110

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    • gttaagri says:

      வலைச்சரம் மூலம் பசுமை தமிழகம் இணைய தளத்திற்கு அறிமுகம் கொடுத்தற்கு நன்றி!!
      அன்புடன்,
      admin பசுமை தமிழகம்

  2. திண்டுக்கல் தனபாலன் says:

    வணக்கம்…

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_24.html) சென்று பார்க்கவும்… நன்றி…

    • gttaagri says:

      வலைச்சரம் மூலம் பசுமை தமிழகம் இணைய தளத்திற்கு அறிமுகம் கொடுத்தற்கு நன்றி!!
      அன்புடன்,
      admin பசுமை தமிழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *