நெல் விதைப் பரிசோதனை

நெல் விதைகளைப் பரிசோதனை செய்து கொண்டு சம்பா பட்டத்தில் ஈடுபட்டால் அதிக மகசூல் பெறலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் சி.பெருமாள் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மத்திய கால நெல் ரகங்களான வெள்ளைப் பொன்னி, மே.வெ. பொன்னி, பாபட்லா – 5205, குறுகிய கால ரகங்களான ஏடிடி (ஆர்) 45, ஏடிடி – 36, ஏடிடி – 37, ஏடிடி – 39 ஆகியவை முன்சம்பா மற்றும் சம்பா பருவத்துக்கு பயிரிட மிகவும் ஏற்ற ரகங்களாகும்.
  • இப்போது தமிழகத்தில் நெல் பயிரிடப்படும் அனைத்து பகுதிகளிலும் உயர் விளைச்சலும் அதிக வருமானமும் தரக்கூடிய, திருந்திய நெல் சாகுபடி முறை விவசாயிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  • இந்த முறைப்படி சாகுபடி செய்யும் போது ஏக்கருக்கு 3 கிலோ என்ற அளவே விதை நட்டால் போதும்.
  • சதுர நடவு முறையில் அதாவது 22.5 செ.மீ.-க்கு 22.5 செ.மீ. என்ற பயிர் இடைவெளியில் நாற்றுகள் நடப்படுவதோடு 1 ச.மீட்டருக்கு, 25 குத்துகள் பயிர் என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது.
  • போதிய காற்றோட்ட வசதியும், பூச்சி நோய்தாக்காத வண்ணம் பயிர்கள் ஆரோக்கியமாக வளர்ந்து குத்துக்கு 30-40, வாளிப்பான கதிர்கள் கிடைக்கும்.
  • மேலும் ஒவ்வொரு கதிரும் சராசரியாக 200-250 நெல்மணிகளைக் கொண்டதாக இருக்கும்.
  • ஏக்கருக்கு 3 கிலோ என்ற விதையளவை மேற்கொள்ளும்போது ஒவ்வொரு நெல் மணியும் தரமாகவும், அதிக முளைப்புத்திறன் கொண்டவையாகவும் இருக்க வேண்டும்.
  • அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்ட விதைகளை பயன்படுத்தும்போது நாம் திட்டமிட்ட சாகுபடி பரப்பில் நடவு செய்ய போதுமான நாற்றுகள் கிடைக்கும்.
  • இந்த சம்பா பட்டத்தில் உத்தரமேரூர், மதுராந்தகம், சித்தாமூர், பவுஞ்சூர், அச்சிறுப்பாக்கம் வட்டார விவசாயிகள் ஏற்கெனவே தங்களது கையிருப்பில் உள்ள நெல்விதைகளையே விதைப்புக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
  • அப்படி பயன்படுத்தும் போது கையிருப்பு விதைகள் போதுமான முளைப்புத்திறனுடன் இருக்கிறதா என பார்ப்பது அவசியம்.
  • எனவே விவசாயிகள் நாற்று நடும் முன் விதைப்புக்காக தங்கள் கைவசம் உள்ள நெல் விதையிலிருந்து 400 கிராம் அளவில் மாதிரி எடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள விதை பரிசோதனை அலுவலகத்தில் ரூ.30 கட்டணத்துடன் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
  • மேலும் விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு தபால் மூலமும் அனுப்பி பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *