பச்சை நிறமே இல்லாமல் (No Chrolophyll) வளரக்கூடிய ‘கருவாச்சி’ என்ற புதிய ரக சம்பா நெல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வறட்சியை தாங்கி விளையக்கூடியதால் அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
- ராமநாதபுரம் உத்தரகோசமங்கை, எக்ககுடி, கடம்பங்குடி, புக்குளம், மல்லாங்குடி, பனைக்குளம் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் ‘கருவாச்சி’ என்ற புதிய சம்பா ரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- வறட்சி காலத்திலும் நல்ல மகசூலை தரும் இந்த ரக நெல்லுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
- இந்த நெற்பயிரில், நாற்றுகளில் பச்சை நிறமே இல்லை.
- டீத்தூள் நிறத்தில் காணப்படும் நாற்றுகள் பார்ப்பதற்கு காய்ந்தநிலையில் இருப்பதால் இதை ‘கருவாச்சி’ ரகம் என விவசாயிகள் செல்லமாக அழைக்கின்றனர்.
- ஏக்கருக்கு ஒன்றரை டன் மகசூல் தரக்கூடிய இந்த நெற்பயிர், குறைந்தளவு தண்ணீர் இருந்தாலும் மளமளவென வளரும் தன்மை கொண்டது.
- இதனால், பெரும்பாலான விவசாயிகள் ஆடுதுறை 45 ரக நெல்லுக்கு பிறகு, இந்த புதிய ரக நெல்லை அதிகளவு சாகுபடி செய்துள்ளனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்