நெல் சாகுபடியில் புதிய ஒற்றை நாற்று நடவு மூலம் செம்மை நெல் சாகுபடி செய்து குறைந்த செலவில் அதிக விளைச்சல் ஏற்படுத்தி கூடுதல் லாபம் பெறமுடியும். இதன் செயல் முறைகள் பற்றி ஈரோடு வேளாண்மை இணை இயக்குனர் கோபால் தெரிவித்து உள்ளாவது:
- செம்மை நெல் சாகுபடி செய்ய ஒரு ஏக்கர் நடவு செய்ய 3 கிலோ விதையை 30 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து ஒருநாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
- முளைகட்டிய விதையை நாற்றாங்காலில் இட வேண்டும்.
- மேட்டுப்பாத்தி அமைத்து நாற்றங்கால் விடுவதால் நாற்றுக்கள் வளமான மற்றும் தடிமனான நாற்றுக்கள் கிடைக்கும்.
- 13 அல்லது 14 நாட்கள் சென்ற பிறகு நாற்று நன்றாக வளர்ந்து நடவுக்கு தயாராகிவிடும்.
- நிலத்தினை நன்றாக சமன்செய்து, மார்க்கர் கருவி மூலம் ஒரு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்யவேண்டும்.
- ஒரு நாற்றுக்கு மற்றொரு நாற்றுக்கும் வரிசைக்கு வரிசை 25 செ.மீ-25 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
- நடவு செய்த பத்தாவது நாள் கோனாவீடர் மூலம் களை எடுக்க வேண்டும். 10 நாட்கள் இடைவெளியில் 4 முறைகளை எடுக்க வேண்டும்.
- கோனாவீடர் கருவி மூலம் களை எடுக்கும்போது களைச்செடிகள் சேற்றுக்குள் அமுத்தப்பட்டு மட்கி, பயிர்களுக்கு உரமாகி விடுகின்றன. இதனால் மண்வளமும் பெருகும். மேலும் பயிர்கள் மொத்த வயதில் 10 நாட்களுக்கு முன்பாகவே பயிர்கள் அறுவடைக்குத்தயாராகி விடும்.
- நெல் மணிகள் நன்கு திரட்சியாகவும், அதிக எடை கொண்டதாகவும் இருக்கும். மகசூலும் அதிகரிக்கும்.
நன்றி: மாலை மலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்