தென்னையில் கோகோ ஊடுபயிர் பயன்கள்

தென்னந்தோப்புகளில் “கோகோ’ சாகுபடி செய்தால், தென்னை விளைச்சல் அதிகரிக்கும்’ என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

  • தென்னையில் ஊடுபயிராக “கோகோ’ பயிரிடுவதன் மூலம் தென்னை விளைச்சல் அதிகரிக்கிறது.
  • ஆண்டுக்கு 800 கிலோ இலைகள் உதிர்வதால், மண்ணில் அங்கக சத்து உயர்கிறது.
  • சிறந்த முறையில் களை கட்டுப்பாடு செய்யப்படுகிறது.
  • மண் அரிமானம் தடுக்கப்படுகிறது.
  • மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது.
  • ஒரு ஏக்கரில் “கோகோ’ பயிரிடுவதற்கு 200 முதல் 220 நாற்றுகள் தேவைப்படும்.
  • ஆண்டுக்கு மரம் ஒன்றில் இருந்து இரண்டு கிலோ உலர் விதைகள் கிடைக்கும்.
  • ஆண்டு விளைச்சல் 400 கிலோ உயரும். ஆண்டு வருமானம் 28 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
  • இதில் செலவு போக நிகர லாபம் 20 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முகமது இக்பால் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *