வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்பது பெரியவர்களின் கூற்று. அதற்கு ஏற்ப இரண்டு தலைமுறையாக வாழை விவசாயத்தால் வாழையடி வாழையாக வளர்ந்து வருகிறார் திருச்செந்துார் விவசாயி அற்புதராஜ்.
வளமான வாழை விவசாயம் குறித்து அவர் கூறியதாவது:
- தந்தை காலத்தில் இருந்தே வாழை விவசாயம்எங்கள் குடும்ப பொருளாதார தேவையை பூர்த்தி செய்கிறது. 5 ஏக்கரில் ஆரம்பித்த விவசாயம் இன்று 30 ஏக்கராக விரிவடைந்துள்ளது.
- எங்கள் பகுதி செம்மண், கரிசல் மண் பகுதியாக இருப்பதால் மற்ற பயிர்களை விட வாழை நன்றாக வளர்கிறது. வாழைக்கு இதுபோன்ற சத்துள்ள மண் மிகவும் அவசியம்.
- நாட்டு கருவேல மரங்கள் வளரும் நிலத்தை செப்பனிட்டு விவசாயம் செய்வதால், அதன் தழைகள் நிலத்தில் விழுந்து மக்கி உரமாகிறது.
- அதனால், வாழை கன்றுகளுக்கு இயற்கையாகவே சத்து கிடைக்கிறது.
- கால்நடைகள் வளர்ப்பும் இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் என்பதால் இயற்கை உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. வாழை கன்றுகளை ஆந்திரா, தமிழக கிராமங்களில் இருந்து வாங்கி நடுகிறோம்.
- சொட்டு நீர் பாசனம் இருப்பதால் வறட்சியிலும் வாழை வளர்கிறது.
- பயிரிட்ட 10 மாதங்களில் வாழை தார்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். தாய்வாழை செழித்து வளர அதன் கன்றுகளை வெட்டி பராமரிக்க வேண்டும்.
- நாடு, சக்கை, நேந்திரன், கசிளி, பூலான் செண்டு, செவ்வாழை ரகங்களை பயிரிடுகிறோம். இதில் நாடு, சக்கை, கசிளி வாழை இலை, காய்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு.
- செவ்வாழை, கோழிக்கூடு, பூலான் செண்டு பழங்கள் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
- இலை, காய்களை கேரளா, தமிழகத்திற்கு ஏற்றுமதி செய்கிறோம். விழாக்காலங்கள், முகூர்த்த நாட்களில் இலை, வாழை பழங்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
- வாழை விவசாயத்தில் இலை, பூ, காய், தண்டு, நார் என எதுவுமே வீணாகாமல் வருமானம் கொடுக்கும். வாழை என்னை மட்டுமல்ல என்னை சார்ந்த தொழிலாளர்களையும் வாழையடி வாழையாக வாழ வைக்கிறது, என்றார்.
தொடர்புக்கு: 9715605462
– எஸ்.அதிபன் போஸ், மதுரை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Super