நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2015 செப்டம்பர், 8ம் தேதி, கறவை மாடுகள் பராமரிப்பு, நோய் மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2015 செப்டம்பர், 8ம் தேதி, காலை, 9 மணிக்கு, “கறவை மாடுகள் பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடக்கிறது.பயிற்சி முகாமில், கறவைமாடு இனங்கள், இனவிருத்தி முறைகள், தீவன முறைகள், கறவைமாடுகளைப் பராமரிக்கும் வழிமுறை, கறவைமாடுகளில் ஏற்படும் பல்வேறு நோய்கள், அதன் தாக்கம் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கப்படும்.மேலும், நோய் தாக்கம் ஏற்படும் கால அட்டவணைக்கேற்ப தடுப்பூசி அளிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்படும்.
அதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தொலைபேசி மூலமாகவோ, செப்டம்பர், 7ம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள், தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். தொலைபேசி எண்:04286266345
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்