இயற்கை முறை நிலகடலை சாகுபடி டிப்ஸ்

  • நிலக்கடலையோடு தட்டைப்பயிர் வகையை ஊடுப்பயிராக பயிரிட்டால், சிவப்பு கம்பளி புழுவை கவரும் செடியாக தட்டைப்பயிறு இருக்கும்.
  • உலர் களத்தில் நிலக்கடலையை காயவைத்து, அதை, மரக்கட்டைக் கொண்டு அடிப்பதால் கடலையை பிரிக்கலாம்.
  • மணல் கலந்த மண்ணோ நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஏற்றது ஏனெனில், அங்கு குறைந்த அளவே பருப்புகளை கடலை உருவாகும்.
  • மணல் கலந்த மண்ணே  நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஏற்றது ஏனெனில்  அங்கு குறைந்த  அளவே பருப்பு இல்லா கடலை உருவாகும்.
  • வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்ப்பதால், அது சிவப்பு கம்பளிப்புழு கவரும் செடியாகிவிடும்.
  • இரவு வேளையில் நிலக்கடலை வயலுக்கு அருகில் பல இடங்களில் வைக்கோல் எரித்தால், அதன் அருகில் வைத்திருக்கும் நீரிலோ ஆமணக்கு கலந்த நீரிலோ, தீ வெளிச்சத்தில் கவரப்பட்ட பூச்சிகள் விழும்.
  • சுண்ணாம்பு கரைசலைத் தெளிப்பதால், இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • தண்ணீரை தெளிப்பதால் இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • புகையிலை வெட்டுப்புழுவின் தாக்குதலைக் குறைக்க ஆமணக்கு செடியை வரப்பு பயிராக பயிரிடவேண்டும்.
  • கோடை உழவு செய்வதால், சிவப்பு கம்பளிப்புழுவின் கூட்டுப்புழுவை வெளியேற்றி அழிக்கமுடியும்.
  • 10 கிலோ / சோற்றுக் கற்றாழையை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து தெளிப்பதால் சிவப்பு கம்பளிப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • நிலக்கடலையில் வட்ட ‘மொசைக்’ நோயைக் கட்டுப்படுத்த காய்ந்த சோளம் / தென்னை ஓலையை தூளாக்கி 600 செ வெப்பநிலையில் தண்ணீரில் ஒரு மணி நேரம் கொதிக்க வைத்துப்பின் வடிகட்டி அதில் நீர் கலந்து விதைத்த 10 ஆம் நாள்  20 நாள் என இருதடவைத் தெளிப்பது நல்லது.
  • இரண்டாவது அல்லது மூன்றாவது நீர்ப்பாசனம் செய்யும்போது பாசன நீருடன் வேப்பஎண்ணெயை கலந்து விடுவதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.
  • ஏக்கருக்கு 6லி வேப்ப எண்ணெய் தெளிப்பதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.
  • 4 சதவீதம் வேப்பஎண்ணெய் கரைசல் அல்லது 6 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிப்பதால் துரு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *