பல நன்மைகள் தரும் திருநீற்றுப் பச்சிலை!

சில செடிகளில் பு க்கள் வாசனை நிறைந்ததாக காணப்படும். சில செடிகளில் இலைகள் வாசம் மிகுந்ததாக இருக்கும். அந்த வரிசையில் நாம் காண இருப்பது திருநீற்றுப் பச்சிலை என்ற மூலிகை செடியை பற்றி தான்…

  • திருநீற்றுப் பச்சிலை மிகவும் வாசனை மிகுந்த தாவரம். இதனுடைய பிறப்பிடம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தான். திருநீற்றுப்பச்சைக்கு உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, விபூதிபச்சிலை, பச்சபத்திரி, திருநீத்துப்பத்திரி போன்ற வேறு பெயர்கள் உள்ளன. முற்காலங்களில் சில பகுதிகளில், திருநீறு தயாரிப்பில் இதன் சாம்பல் சேர்க்கப்பட்டதால் ‘திருநீற்றுப்’பச்சிலை எனும் பெயர் உருவாகியிருக்கலாம்
  • ஆங்கிலத்தில் பசில் (Basil)  Scientific name  – Ocimum basilicum) என்று அழைக்கப்படும். இத்தாலிய சமையல் உணவுகளான பாஸ்தா, பிஸ்ஸா போன்றவற்றில் பயன் படுத்த படுகிறது.
  • இதன் விதைகள் வடக்கத்திய மாநிலங்களில், கோடை வெப்பத்தை குறைக்க நீரில் ஊற வைத்து சர்பத் போட்டு குடிக்கிறார்கள்.
  • திருநீற்றுப் பச்சிலை செடியில் இலைகள் வாசனைமிகுந்ததாக இருக்கும்.
  • திருநீற்றுப் பச்சிலை பு க்கள் வெள்ளை கலந்த ஊதா நிறத்தில் இருக்கும்.
  • திருநீற்றுப் பச்சிலை இலைகள் கொசு விரட்டியாகவும் பயன்படுகிறன.

  • திருநீற்றுப் பச்சிலை வளராத செடிகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.
  • திருநீற்றுப் பச்சிலையில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட், பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது.
  • திருநீற்றுப் பச்சிலை மிகக்குறைந்த கலோரிகளைக் கொண்டது.
  • பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாது, சிட்ரால், சிட்ரோனெலால், ஜெரானியால், மெத்தில் என ஏராளமான மூலப்பொருள்கள் இதற்குள் இருக்கின்றன.
  • திருநீற்றுப் பச்சிலை இலையைக் கசக்கி முகர்ந்து பார்த்தால், தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகிவிடும்.
  • திருநீற்றுப் பச்சிலை வாந்தியை நிறுத்துவதில் இது மிகச்சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
  • தலையில் பேன் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளவர்களுக்கு இதன் இலை சிறந்த தீர்வாக இருக்கும்.
  • திருநீற்றுப் பச்சிலை பருக்களை குணப்படுத்தும்.
  • திருநீற்றுப் பச்சிலை கண்கட்டி போன்ற வெயில் கொப்புளங்களுக்கும் இதனுடைய சாறு மிகச்சிறந்த தீர்வைத் தரும்.
  •  திருநீற்றுப் பச்சிலையின் விதைகளைத் தான் சியா விதைகள் என்ற பெயரில் விற்கப்படுகின்றன. இதைத் தான் ஜிகர்தண்டா போன்ற குளிர் பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.
  • திருநீற்றுப் பச்சிலையின் விதைகள் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.
  •  விதைகள் வயிற்றில் உள்ள பு ச்சிகளை அழிக்கும் தன்மை உடையது.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பல நன்மைகள் தரும் திருநீற்றுப் பச்சிலை!

  1. BHASKARAN says:

    திருநீற்றுப் பச்சிலையின் விதைகளைத் தான் சியா விதைகள் என்ற பெயரில் விற்கப்படுகின்றன. இதைத் தான் ஜிகர்தண்டா போன்ற குளிர் பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.
    இது தவறான கருத்து.
    திருநீற்று பச்சிலை விதைகள் என்பது சப்ஜா விதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *